- தூத்துக்குடி மாவட்டம்
- Vallanadu
- தூத்துக்குடி
- மல்லநாடு, தூத்துக்குடி மாவட்டம்
- கிழக்கு நாடு
- திருநெல்வேலி
- தூத்துக்குடி தேசிய நெடுஞ்சாலை
- தூத்துக்குடி மாவட்டம் மாவட்டம் மல்லனாடு
- தின மலர்
தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டம் வல்லநாடு அருகே சுற்றுலா வேணும் டிப்பர் லாரியும் மோதிய விபத்தில் 3 பேர் உயிரிழந்துள்ளனர். கிழவல்லநாடு பகுதியில் அதிகாலை நிகழ்ந்த விபத்தில் குழந்தை உற்பட 2 பேர் உயிரிழந்துள்ளனர். திருநெல்வேலி – தூத்துக்குடி தேசிய நெடுஞ்சாலையில் லாரியும், வேனும் நேருக்கு நேர் மோதிக்கொண்ட விபத்தில் 2 பெண்கள், ஒரு வயது குழந்தை 3 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
திருநெல்வேலியை சேர்ந்த சுமார் 20 பேர் ஒரு வேனில் தூத்துக்குடி நோக்கி சென்றுகொண்டிருந்தனர். தூத்துக்குடி-திருநெல்வேலி நெடுஞ்சாலையில் முறப்பநாடு அருகே அந்த வேன் சென்றுகொண்டிருந்த போது எதிரே வந்த லாரியும் இந்த வேனும் திடீரென நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் வேனில் பயணம் செய்தவர்களுக்கு பலத்த அடி ஏற்பட்டது. இந்த விபத்தில் 2 பெண்கள் உட்பட 3 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
விபத்தில் படுகாயம் அடைந்த 15 பேர் நெல்லை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. விபத்து தொடர்பாக போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
The post தூத்துக்குடி மாவட்டம் வல்லநாடு அருகே சுற்றுலா வேணும் டிப்பர் லாரியும் மோதி விபத்து: 3 பேர் உயிரிழப்பு appeared first on Dinakaran.